Tuesday, 21 December 2021

தமிழகத்தில் பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறும்!

தமிழகத்தில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 2022 ஆம்

கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்று

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்

தெரிவித்திருந்தார்கள். 


அதன்படி அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வழக்கம்போல் மார்ச்

மாதத்தில் நடைபெறுமா அல்லது ஏப்ரல் மே மாதத்தில் நடைபெறுமா என்ற
குழப்பம் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களுக்கு இடையையும் இருந்து வந்தது.

 நடத்தப்பட்ட இருக்கக்கூடிய பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் மாதம் அல்லது மேமாதம் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று நவம்பர் மாதம் செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டி ஒன்றில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.


 இன்று  21.12.2021  பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்த

செய்தி யாதெனில் தமிழகத்தில் மே மாதம் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு

மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான

அட்டவணை தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அந்த அட்டவணையை

மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அவர்கள் வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.





No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...