10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு ஆரம்பமாகிறது.
இந்த திருப்புதல் தேர்வானது எப்படி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- மாணவர்களின் விடைத்தாள்களை தேர்வுகள் நடைபெறும் அதேநாளில் மாவட்ட கல்வி அலுவலர் கூறும் மையத்தில் விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும்.
- பெறப்பட்ட விடைத்தாள்கள் வேறு பள்ளிக்கு வழங்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
- பரிமாற்றம் செய்த விடைத்தாள்களை விரைவில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
- பிற பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட விடைத்தாள்களை சரியான முறையில் திருத்தி மதிப்பீடு செய்ய வேண்டும்.
- மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்ட பள்ளிகளிலேயே பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- மாணவர்களின் மதிப்பெண்களை இரண்டு பட்டியலிட்டு தேர்வு நடைபெற்ற அதே நாளில் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
- பின்னர் அந்த மதிப்பெண் ஆனது எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
No comments:
Post a Comment