நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் 22ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 22ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள படுகர் இன மக்களின் குலதெவமான ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 8ஆம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என்று நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment