தமிழகத்தில் கோரணா காரணமாக இந்த கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
முன்னர் ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டு தேர்வுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்வானது திருப்புதல் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 17ஆம் தேதி துவங்கி 24-ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து தற்பொழுது இந்த திருப்புதல் தேர்வு முடிந்த பின்னர் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை ஒன்பது நாட்கள் வழங்கப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment