தமிழகத்தில் கொரானா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டன.
அதன் பின்னர் நவம்பர் மாதம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இப்போது ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க துவங்கியதால் தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி அன்று ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பள்ளிகளில் வகுப்பு தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பாதிப்பு தமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் ஒரு வார காலம் விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிக்கல்வி துறையால் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment