தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் திறக்கப்படும் என்று தமிழக அரசும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பானது தமிழக மருத்துவ குழு பரிந்துரையை ஏற்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் இன்னும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்று ஒரு நாளைக்கு என்று நிலை இருந்து வருகிறது.
இதனால் பள்ளிகள் திறப்பை மீண்டும் தள்ளி வைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கும் முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்து இன்னும் சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்
No comments:
Post a Comment