தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று செய்தியாளர்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வேறு சில மாநிலங்களில் பரவலுக்கு மத்தியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் திறந்துள்ளனர். எனவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன்னர் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் அவர்களிடம் இது சம்பந்தமாக பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.
அதேபோல் இந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, இந்த ஆண்டில் கண்டிப்பாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய அவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க வேண்டி உள்ளதால் விரைந்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment