தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சிமுறை இன்றி 100% அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரும் வீதம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த ஆண்டு 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான பாடங்களை விரைந்து முடிப்பதற்கு ஆசிரியர்களுக்கு போதுமான காலம் தேவை என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் தற்போது ஒரு தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் இன்னும் முழுமையாக குறையாததால் மாணவர்களின் நலனை கருதி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment