இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் வரும் ஜூன் மாதம் பத்தாம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதாலும் வரும் ஜூன் நான்காம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாலும் இந்த ஆண்டு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இருந்தது.
23/05/24 அன்று தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழக்த்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளையும் ஜூன் 10ஆம் தேதி திறக்கலாம் என ஆலோசித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் இறுதி வாரத்திலும் மே முதல் வாரத்திலும் வெப்பத்தின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது பின்னர் தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது ஆனால் மே மாதம் 25ஆம் தேதிக்கு மேல் அனைத்து மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள் எனவே மீண்டும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெறுகிற ஆலோசனைக் கூட்டத்தில் அந்த நேரத்தில் தமிழகத்தில் வெப்பநிலையை பொறுத்து ஜூன் 10ஆம் தேதிக்கு மேல் பள்ளிகள் திறக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்
No comments:
Post a Comment