Tuesday, 30 July 2024

ஆகஸ்டு 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆகஸ்ட் 3ஆம் தேதி  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

        இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது. 

        ஆடிப்பெருக்கு மற்றும் விடுதலைப்போராட்ட வீரர் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்  அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் கூறியுள்ளார்.

        அதே நேரத்தில் மாவட்ட கருவூலம் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...