Saturday, 26 February 2022

பொதுத்தேர்வு அட்டவணை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும்!

   தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

 அதன்படி பொதுத் தேர்வு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத துவக்கத்தில் இருக்கலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட கொண்டிருக்கிறது.

 இந்நிலையில் நேற்று பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நேற்று அட்டவணை வெளியிடப்படவில்லை. அட்டவணை வெளியிடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

 அந்த வகையில் இன்று பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்களில் கூறப்பட்டது என்னவென்றால் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான அட்டவணைக்கு தமிழக முதல்வர் அவர்கள் ஒப்புதல் கொடுக்கப்பட்டதாகவும் எனவே அந்த அட்டவணை இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...