Monday, 31 January 2022
Sunday, 30 January 2022
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் திறக்கப்படும் என்று தமிழக அரசும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பானது தமிழக மருத்துவ குழு பரிந்துரையை ஏற்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் இன்னும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்று ஒரு நாளைக்கு என்று நிலை இருந்து வருகிறது.
இதனால் பள்ளிகள் திறப்பை மீண்டும் தள்ளி வைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கும் முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்து இன்னும் சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்
Monday, 24 January 2022
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்
தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று செய்தியாளர்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வேறு சில மாநிலங்களில் பரவலுக்கு மத்தியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் திறந்துள்ளனர். எனவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன்னர் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் அவர்களிடம் இது சம்பந்தமாக பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.
அதேபோல் இந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, இந்த ஆண்டில் கண்டிப்பாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய அவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க வேண்டி உள்ளதால் விரைந்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும்...!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் இந்த செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இப்பொழுது அரியர் மாணவர்களுக்கும் இந்த செமஸ்டர் தேர்வானது ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.
இதன்மூலம் இந்த செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் மூலமாக சுமார் 20 லட்சத்து 875 மாணவர்கள் எழுத உள்ளனர்.
இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு?
தமிழகத்தில் கொரானா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டன.
அதன் பின்னர் நவம்பர் மாதம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இப்போது ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க துவங்கியதால் தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி அன்று ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பள்ளிகளில் வகுப்பு தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பாதிப்பு தமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் ஒரு வார காலம் விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிக்கல்வி துறையால் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Saturday, 22 January 2022
Online semester exams instructions 2022
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செமஸ்டர் தேர்வுகள் எந்த ஆண்டு மாணவர்களுக்கு பொருந்தும்.
பாலிடெக்னிக் 1,3,5-வது செமஸ்டர் பொறியியல் 3,5,7-வது மற்றும் பட்டப்படிப்பு இளநிலை தேர்வுகளில் 1,3,5-வது செமஸ்டர்களுக்கு ஆன்லைனிலும் மேலும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு 1,3-வது செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும்.
ஆப்லைன் தேர்வு என்பது இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும். அதாவது இளநிலை ஆறாவது செமஸ்டர் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு நான்காவது செமஸ்டர் ஆகும்.
பொறியியல் 8-வது செமஸ்டர் தேர்வு நேரடி தேர்வாக நடைபெறும்.
MA, MSC, ME உள்ளிட்ட முதுநிலை மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெறுமா?
MA, MSC முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வானது 1,3-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். ME மூன்றாவது செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும். இறுதி செமஸ்டர் தேர்வுகள் அதாவது நான்காவது செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக ஆஃப்லைனில் நடத்தப்படும்
அரியர் தேர்வுகள் தற்போது ஆன்லைனில் நடத்த நடத்தப்படும்
Friday, 21 January 2022
தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும்!
ஆன்லைன் தேர்வு குறித்த அமைச்சர் பொன்முடி பேட்டி முழு விவரம்...
பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முரையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.
இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும்.
கல்லூரி இறுதியாண்டு தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி அடிப்படையில் செமஸ்டர் தேர்வு நடக்கும்.
பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என அனைத்திலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.
பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும்.
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.
பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறித்து 29ம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும்.
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகளை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை. எடுக்கப்படும்.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும்.
கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி அனைத்துக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெறும்.
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான முறையிலேயே ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.
எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காத வகையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.
ஒரு செமஸ்டர் தேர்வில் 4 தாள்கள் எழுத வேண்டி இருந்தால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அனுப்பலாம்.
கல்லூரி முதல்வர், கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.
Wednesday, 19 January 2022
Tuesday, 4 January 2022
திருப்புதல் தேர்வு எப்படி நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு ஆரம்பமாகிறது.
இந்த திருப்புதல் தேர்வானது எப்படி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- மாணவர்களின் விடைத்தாள்களை தேர்வுகள் நடைபெறும் அதேநாளில் மாவட்ட கல்வி அலுவலர் கூறும் மையத்தில் விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும்.
- பெறப்பட்ட விடைத்தாள்கள் வேறு பள்ளிக்கு வழங்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
- பரிமாற்றம் செய்த விடைத்தாள்களை விரைவில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
- பிற பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட விடைத்தாள்களை சரியான முறையில் திருத்தி மதிப்பீடு செய்ய வேண்டும்.
- மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்ட பள்ளிகளிலேயே பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- மாணவர்களின் மதிப்பெண்களை இரண்டு பட்டியலிட்டு தேர்வு நடைபெற்ற அதே நாளில் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
- பின்னர் அந்த மதிப்பெண் ஆனது எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...

-
தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...
-
தமிழகம் முழுவதும் நாளை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 13/7/2024 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்க...