Sunday, 27 February 2022

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

   எதிர்வரும் 4/3/2022 வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகவான் வைகுண்டசாமி பிறந்த நாள் விழா நடைபெறும். 

  இந்த திருவிழாவினை ஒட்டி அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

  மேலும் இந்த திருவிழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்த இரண்டு மாவட்டங்களில் ஆட்சித்தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

Saturday, 26 February 2022

பொதுத்தேர்வு அட்டவணை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும்!

   தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

 அதன்படி பொதுத் தேர்வு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத துவக்கத்தில் இருக்கலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட கொண்டிருக்கிறது.

 இந்நிலையில் நேற்று பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நேற்று அட்டவணை வெளியிடப்படவில்லை. அட்டவணை வெளியிடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

 அந்த வகையில் இன்று பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்களில் கூறப்பட்டது என்னவென்றால் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான அட்டவணைக்கு தமிழக முதல்வர் அவர்கள் ஒப்புதல் கொடுக்கப்பட்டதாகவும் எனவே அந்த அட்டவணை இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Sunday, 20 February 2022

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் தேர்தல் நடைபெறாது 2 இடங்களுக்கு நாளை இருபத்தி ஒன்றாம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு மையங்களான வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பள்ளிக்கு மற்றும் சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டன் அரசு தொடக்கப் பள்ளிக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பள்ளிகள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

Tuesday, 15 February 2022

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

   நாளை (16/2/2022) புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஷேக் பீர் முஹம்மது சாகிப் ஆண்டு விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக (26/2/2022) சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். 

 மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு

Monday, 14 February 2022

வினாத்தாள் கசிவுக்குக் காரணமாகிய 2 தனியார் பள்ளி நபர்கள் மீது நடவடிக்கை!

 


தமிழகத்தில் பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து இன்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் தேர்வுகளை துவங்குவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  மேலும் தேர்வுகள் எப்படி நடத்துவது எத்தனை நாட்கள் நடத்துவது போன்றவை ஆலோசிக்கபட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 

இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி விரைவில் பொது தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Friday, 11 February 2022

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழக்த்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (12 2 2022) சனிக்கிழமை திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என அந்த மாவட்ட ஆட்சியர் காயத்ரி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Sunday, 6 February 2022

தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சிமுறை இன்றி 100% அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரும் வீதம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த ஆண்டு 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான பாடங்களை விரைந்து முடிப்பதற்கு ஆசிரியர்களுக்கு போதுமான காலம் தேவை என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் தற்போது ஒரு தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் இன்னும் முழுமையாக குறையாததால் மாணவர்களின் நலனை கருதி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (24/08/2024), ஞாயிற்றுக்கிழமை (25/08/2024) மற்றும் திங்கட்கிழமை (26/08/2024) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வகை பள்...